Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெறமுடியும் - மோடி

Webdunia
புதன், 16 மே 2018 (14:41 IST)
224 சட்டசபை தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி தேர்தல் நடந்தது. மே 15 செவ்வாய்க்கிழமையன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

 
நேற்று மாலை பிரதமர் மோடி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
 
''பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பாதையில் நடைபோடுகிறது. கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை ஹிந்திமொழி பேசிய மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்டது. அது கற்பிதம்.
 
வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, மற்றும் அஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் வெற்றிபெற்றது. பிராந்திய மொழி பேசப்படும் பல மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 
மக்களுடன் மக்களுக்காக செயல்படும் கட்சி பா.ஜ.க. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் வெறும் அரசியல் லாபங்களுக்காக இந்திய அரசியலமைப்பை, இந்தியர்களின் உணர்வுகளை சேதப்படுத்தும் செயல்கள் வெறும் தேர்தல் அரசியலுக்காக நடைபெற்றன. மாநில-மத்திய அரசுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் மோசமானது.'' என்று மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments