Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சி

சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சி
, செவ்வாய், 27 ஜூன் 2017 (17:20 IST)
சிறையில் நடந்த அதிகாரபூர்வ நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த ஆடை அவிழ்ப்பு சம்பவம், சன் சிட்டி என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்க சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது.


 

 
சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், ஜோஹனஸ்பர்க் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில், தொடை உயர பூட்ஸ் காலணிகளை அணிந்தும், அரைகுறை ஆடை அணிந்தும் காணப்பட்ட இரு பெண்கள், ஆரஞ்சு வண்ண உடையணிந்த ஆண்களை ( சிறைக்கைதிகளை) நெருக்கமாக கட்டியவாறு இருப்பதை காண்பித்தன.
 
சிறையில் உள்ள நன்னடத்தை துறை இப்படங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளது.
 
இந்த சம்பவம் குறித்தான முழு விசாரணை நடைபெற்று வருவதாக சிறை நன்னடத்தை துறையின் நடப்பு ஆணையாளரான ஜேம்ஸ் ஸ்மால்பெர்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

webdunia

 

 
''இது தொடர்பாக சனிக்கிழமையில் இருந்து நாங்கள் சமூகவலைத்தளத்தில் பார்த்த காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று ஜேம்ஸ் ஸ்மால்பெர்கர் தெரிவித்தார்.
 
சிறையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 13 சிறை காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைத்துறையின் நடத்தை விதிகளின் ``முழு வீச்சை எதிர்கொள்ள வேண்டும்`` என்று ஜேம்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
 
மாதாந்திர இளைஞர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூன் 21-ஆம் தேதியன்று சிறையில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கைதிகளின் புனர்வாழ்வுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் நிகழ்ச்சியில் அவர்கள் அணிய தேர்ந்தெடுத்த உடைகள் ஆகியவை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் போகவேண்டிய அவசியமில்லை