தனது அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், இவ்விரு கட்சிகளுடனும் எந்த காரணத்தைக் கொண்டும் கூட்டணி இல்லை என்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அவர் சொல்லாமல் இருப்பது, அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டணி இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது உருவாகி வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என்ற நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டுமே ரூ.125 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஒரு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோரின் சம்பளம் என்பது சம்பந்தப்பட்டவருக்கும் தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் 400 ரன்கள் என்ற லாராவின் சாதனையை நெருங்கியபோது, திடீரென 'டிக்ளேர்' செய்வதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதுடைய அனுராதா என்பவர், திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அருகில் உள்ள ஒரு மாந்திரீகவாதியிடம் செல்லுமாறு ஒருவர் பரிந்துரை செய்ததின் பேரில், அனுராதாவின் தாயும், மாமியாரும் அவரை மாந்திரீகவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டி கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலின் விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை என பாஜக பிரமுகர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
கோவையில், கணவர் இறந்தது தெரியாமல் மனைவி அதே வீட்டில் ஐந்து நாட்களாக வசித்து வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, இல்லாத ஒரு இடத்திற்கு விளம்பரம் செய்த நிலையில், அந்த விளம்பரத்தை நம்பி இடம் வாங்கிய நபர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக, நுகர்வோர் ஆணையம் மகேஷ்பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், நடிகையும் சமூக வலைதள பிரபலமுமான ராஜஸ்ரீ மோர் என்பவரின் கார் மீது அரசியல்வாதியின் மகன் ஒருவர் கார் மோதிய விவகாரம், சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பிரீமியர் லீக் (DPL) போட்டியில், விரேந்தர் சேவாக் மகன் மற்றும் விராட் கோலியின் உறவினர் ஆகியோர் விளையாட போவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த இரு வீரர்களின் ஏல விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார். இதுகுறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச வெள்ளத்தில் துனாக் வங்கி மூழ்கிய நிலையில் அவ்வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார், தனிப்படை போலீசாரால் சமீபத்த்ல் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்ற கோரியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று காலை முதல் இணையவழியில் தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சம் பி.இ. மற்றும் பி.டெக். இடங்களை இந்தக் கலந்தாய்வு மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில். சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமானார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் இயக்குனர் ராமின் பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவான ‘3BHK’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படங்கள் முதல் நாளில் தமிழ்நாட்டளவில் சுமார் 40 லட்சம் மற்றும் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளன.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பு முக்கியக் காரணிகளாக அமைந்தது.
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிப்பில் அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தற்போது தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன் ராணுவத்தை எதிர்கொண்டு இத்தாலி மண்ணில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் யஷ்வந்த் காட்கேவிற்கு சமீபத்தில் இத்தாலியில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வுடன் இடமாற்றம் ஆகியவை இருந்து வரும் நிலையில், தற்போது சில ஆண்டுகளாக நடந்து வரும் வழக்குகளை காரணம் காட்டி, பதவி உயர்வும், மாறுதல் கலந்தாய்வும் நிறுத்தப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உறுதிபடக் கூறிய போதிலும், பா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் ஒரே நோக்கம் தான் என்றும்,
தாய்லாந்தில் பிறந்த இரட்டை குழந்தைகளான சகோதரன், சகோதரிக்கு 4 வயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு துறை மாணவர் நல விடுதிகளை மொத்தமாக சமூகநீதி விடுதிகள் என பெயரிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு குறித்து பாமக செயல் தலைவர் அன்புமணி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், மருமகளும் அவருடைய தாயாரும் சேர்ந்து மாமியாரை அடித்து கொடுமைப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வார இறுதியில் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்களின் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகளை அதிர வைத்துள்ளது.
ண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன் ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டிச்சேரி சீகம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில், 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. நேற்று தொடங்கிய 2ஆவது சீசன் ஜூலை 27ஆம் வரை நடைபெறவுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.7,400 ஆக வர்த்தகமாகிறது. விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 ஆகக் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை கோவையில் இன்று தொடங்குகிறார் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் "சென்னைக்கு மிக அருகில்" என பொய்யாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கட்டிட மனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார்.
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸானது.
இந்திய பங்குச்சந்தை இன்று வாரத்தின் முதல் நாளை சரிவுடன் தொடங்கினாலும், மிக குறைந்த அளவே சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்தூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி குமாரி என்ற இந்து பெண், முகநூல் வழியாக முகமது ஷாபாஸ் என்பவருடன் பழகி, நாளடைவில் அது காதலாக மாறி திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை மீறி திருமணம் செய்ததால், ஆர்த்தி குமாரியின் பெற்றோர் அவரை இறந்துவிட்டதாகவே கருதிவிட்டனர்.
'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் வட இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்நதார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது.
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம்முக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர் பேபி சாரா. அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் ரசிக்கப்பட்ட குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரானார். அதன் பின்னர் சைவம் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் சாரா நடித்திருந்தார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் தவிப்பில் இருக்கும் நிலையில், வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்ட நடிகையும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத், மக்களுக்கு நிவாரணம் செய்வதற்கு தான் அமைச்சரும் இல்லை, தன்னிடம் நிவாரண நிதியும் இல்லை என்று புலம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு மாதங்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர் கோபால் கேம்கா கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர் ரோஷன் குமார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோபால் கேம்கா கொலையில் ரோஷன் குமாருக்கு பங்கு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு வடிவேலு பஹத் காம்போவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.