சண்டிகரில் விவாகரத்துக்கு பிறகான ஜீவனாம்சம் குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா, தேசத்துக்கு எதிரான செயல்களை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருடைய வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகள் கூட தலைமுறைகளைக் கடந்து இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய நகைகளுக்கு அவை வாங்கப்பட்டதற்கான ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிப்பது நியாயமல்ல என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையே இருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் தற்போது தண்ணீருக்கு தள்ளாடி வருகிறது.
குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 மாத குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் கொடூரமாக கொன்ற சிசிடிவி காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்று மும்பையில் நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை நகரம் மற்றும் புறநகரங்களை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சேவையை நம்பி பயணம் செய்கின்றனர். தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டத்தில், நாள்தோறும் 60க்கும் அதிகமான மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதி மலையிலுள்ள ஆலயப் பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தேவஸ்தானத்திலும் உயர் நிலை பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பெரிய பிழை என்பதற்கான புகார்களை கிளப்பியது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுவது, விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நல்லது என பாஜக பிரபலம் எச். ராஜா அட்வைஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தங்க நகைகளை வங்கி, தனியார் கடன் நிறுவனங்களில் அடமானம் வைக்க புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பரபரப்பான ஐபிஎல் சீசன் ப்ளே ஆஃபை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெறும் MI vs DC போட்டி கத்திமுனை போட்டியாக அமைந்துள்ளது.
மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா நேற்று அதிகாரப் பூர்வமாக ஓய்வுபெற்றார். தனது கடைசி பணிநாளில், உச்சநீதிமன்றம் மீதான ஆழ்ந்த மன வருத்தத்தை வெளிப்படுத்தி, தனக்கான வேலை இட மாற்றம் குறித்த துயரத்தை பகிர்ந்தார்.
தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலானக் கதாநாயகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். விடுதலை இரண்டு பாகங்களையும் இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசு கல்விக்கென ஒதுக்க வேண்டிய நிதியை வழங்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
சமீபகாலமாக சிவகார்த்திகேயன் பற்றி இணையத்தில் சில ட்ரோல் பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன. அதற்குக் காரணம் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் திரையுலகினர் சிலரை அழைத்து அவர்களின் படங்களுக்காகப் பாராட்டி வந்தார் என்பதுதான். தொடர்ச்சியாக இதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகின.
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.
நேற்று காலை நேரத்தில் பங்குச் சந்தையில் மிதமான சரிவு இருந்தாலும், அதன்பின் மதியத்திற்கு மேல் மோசமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் நேற்று 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், முதலீட்டாளர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நஷ்டம் அடைந்தனர் என்பதும் முக்கியமான தகவலாகும்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக இறங்கி கொண்டே வந்தது என்பதும் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். ஆனால் தற்போது மீண்டும் படிப்படியாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று மீண்டும் 71 ஆயிரத்தை ஒரு சவரன் தங்கம் உயர்ந்துள்ளது.
Google நிறுவனம், கூகுள் மீட்டில் பேசும் நபர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஒரு மொழியில் பேசும் நபரின் ஆடியோவை, மற்றொரு நபரின் விருப்பத்திற்கேற்ப, மொழிபெயர்த்து வழங்கும் வசதி இதுவாகும்.
மூதாட்டி அணிந்திருந்த கவரிங் மற்றும் தங்க நகைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரமாண்டமான படம் என்பது ரசிகர்களை ஏமாற்றும் வேலை என்றும், ஒரு படத்தின் கதை மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் நடிப்பு நன்றாக இருந்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதையும், பெரும் பிரம்மாண்டத்தை வைத்துக்கொண்டு ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்ற முடியாது என்பதையும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் விவகாரத்தில் 5 விதமான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்ற வைபவ் சூர்யவம்சி, நேற்றைய போட்டி முடிந்ததும் தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்ட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியுள்ளது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர்.
சூர்யா நடிக்கும் 46வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் துணை பிரதமர் சீனாவுக்கு சென்ற நிலையில், அவரை வரவேற்க முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் செல்லவில்லை என்றும், கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே சென்று ஃபார்மாலிட்டிக்காக வரவேற்பு அளித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு பிறகு, இப்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் நீர்வரத்தை குறைக்க அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிச்சைக்காரர் போல் தோற்றம் கொண்ட ஒருவர் பாகிஸ்தானுக்கு 15 கோடி ரூபாய் அனுப்பி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிஷன் இம்பாசிபிள் திரைப்பட வரிசையில் Mission Impossible Final Reckoning வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் தேவையான ஒரு அடிப்படை பழக்கம். ஆனால், அதைக் காட்டிலும் மேலும் பயனளிக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. அது காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரை குடிப்பது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வைகாசி விசாகத் திருவிழா பெருமிதம் தரும் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ராணுவ மோதல் மற்றும் அதன் விளைவான பதற்றங்களை தொடர்ந்து, இந்தியா தற்போது துருக்கி, அசர்பைஜான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளை எதிர்த்து பல கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
முன்னாள் பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5ஆம் தேதி பங்களாதேஷில் இருந்து வெளியேறிய பிறகு, பங்களாதேஷ் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாக உள்ளது. ஆனாலும் பங்களாதேஷ் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கார் உஸ் ஸமான் இடையே அதிகாரப் போட்டியின் மையமாக மாறியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசிய விட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை தற்போது வங்கதேசத்தில் தொடங்கியுள்ளது.
துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை என கோவையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு, இஸ்லாமியர்களின் வக்பு நிலங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ஒப்புதலுடன் உடனடியாக மசோதா சட்டமானது. ஆனால் இதை பல எதிர்க்கட்சிகள் மத உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டி வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாடமாக சொல்லிக்கொடுக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்ட போது, அவரை வரவேற்க மாநிலத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் யாரும் வராதது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.