Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியா: திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பள்ளிகள்

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (14:46 IST)
தென் கொரியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 56 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
பெரும்பாலான புதிய தொற்றுகள் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான கூப்பாங்கிற்கு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ளது. புச்சியோன் பகுதியில் உள்ள இந்த கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களின் உடைகள் மற்றும் காலணிகளில் இருந்து கொரோனா வைரஸை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
 
இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் உள்ள மற்ற சேமிப்பு கிடங்கில் பணியாற்றுபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
 
புச்சியோன் பகுதியில் திறக்கப்பட்ட 251 பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. தலைநகர் சொலில் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது தாய் கூப்பாங் சேமிப்பு கிடங்கில் பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments