Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு காதலை சொன்னவருக்கு குவியும் வாழ்த்து

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (14:17 IST)
தென்னப்பிரிக்காவில் உள்ள கே.எஃப்.சி உணவகம் ஒன்றில் தனது பெண் தோழியுடன் கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென அதை நிறுத்திவிட்டு தன் தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார்.
அந்த நிகழ்வை அங்கிருந்த கடேகா மலாபோலா என்பவர் பதிவு செய்த காணொளி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #KFCProposal எனும் ஹேஷ்டேகுடன் பரவியது. அந்த இணையைக் கண்டுபிடித்துத் தருமாறு கே.எஃப்.சி வெளியிட்ட பதிவு 19,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டது.
 
பின்னர் அது பூட் ஹெக்டர் என்பவர் நொன்ஹாங்லா எனும் பெண்ணிடம் காதலைத் தெரிவித்த நிகழ்வு என்று தெரிய வந்தது.
 
இப்போது மிகவும் பிரபலமாகியுள்ள அந்த இணையின் திருமணத்துக்கு பியர், நிகழ்விடம், தேன் நிலவு செல்வதற்கான முன்பதிவு போன்றவற்றை இலவசமாக செய்து கொடுக்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பலரும் முன்வந்துள்ளனர். பலர் திருமணச் செலவுக்கு பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.
 
காதல் தோல்வியின் காயங்கள்: மீண்டெழுவது எப்படி?
ஒரு இதழ் அவர்களுக்காக இரண்டு பக்க செய்தி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சாகேஸ் பான்டிவ்னி எனும் பிரபலமான பாடகர் ஒருவர் அவர்கள் திருமணத்தில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments