Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தொழில்நுட்ப' இசை கேட்பதை நிறுத்த வேண்டும் - இளையராஜா

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (10:45 IST)
சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.
 
பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments