Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி 20 போட்டிகளுக்கு வருகிறது புதிய விதி!

டி 20 போட்டிகளுக்கு வருகிறது புதிய விதி!
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:06 IST)
டி 20 போட்டிகளில் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காத அணிகளுக்கு புதுவிதமான தண்டனை விதிக்கப்பட உள்ளது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத டி 20 போட்டிகள்தான் இப்போது அதிகமாக ரசிகர்களைக் கவர்கின்றன. இந்த போட்டிகளின் வெற்றிக்காக அணிகள் கடும் சிரத்தையுடன் செயல்படுகின்றன. இதனால் பந்துவீசும் போது அதிக நேரம் எடுத்துக்கொண்டு குறித்த நேரத்திற்குள் வீசி முடிக்காமல் காலதாமதம் செய்கின்றன.

இந்நிலையில் இதற்காக புதிய விதி ஒன்றை ஐசிசி உருவாக்கி உள்ளது. அதன்படி ’குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரை வீசி முடிக்காத போது, மீதமிருக்கும் அனைத்து பந்துகளுக்கும் அந்த அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே பீல்டராக நிறுத்தி பந்துவீச முடியும்’ என்று அந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு முழு சாதமாக இருக்கும் டி 20 போட்டிகள் இப்போது மேலும் அதை வலுப்படுத்தும் விதமாக புது விதி உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குவிண்டன் டி-காக்கிற்கு பெண் குழந்தை: மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து!