Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம் ஒன்றும் பேட்டிங்கால் இந்த கோப்பையை வெல்லவில்லை – அஸ்வின் கருத்து!

Advertiesment
அஸ்வின்

vinoth

, புதன், 12 மார்ச் 2025 (08:08 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த கோப்பையை வென்றதில் அணியின் உள்ள வீரர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. மேலும் பல போட்டிகளில் இந்திய அணியின் பவுலிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்நிலையில்தான் அஸ்வின் இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் “நான் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த கோப்பையை நாம் பேட்டிங்கால் வெல்லவில்லை. பவுலிங்கால்தான் வென்றுள்ளோம். நமது பவுலிங் யூனிட்டைப் பார்த்தாலே அது தெளிவாகத் தெரியும். நாம் நமது பவுலர்களைப் பாராட்ட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!