Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்மை காக்கும் எல்லை வீரர்களுக்கு நன்றி! – கோலி, சேவாக் சுதந்திர தின வாழ்த்து

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:51 IST)
இன்று நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 74வது சுதந்திர தின நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ளதால் எளிமையான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் மூலமாக வாழ்த்து கூறியுள்ள நடப்பு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நமது நாட்டையும் மக்களையும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். முக்கியமாக தனது குடும்பங்களை துறந்து எல்லையில் நமக்காக உயிர் தியாக செய்யும் வீரர்களுக்கு அவர்களின் பாதுகாப்பிற்காக வேண்டுவோம். ஜெய்ஹிந்த்” என கூறியுள்ளார்.

இந்திய சுதந்திரதினத்திற்கு சேவாக், ஹர்பஜன் சிங், சச்சின் உள்ளிட்ட பல வீரர்களும் ட்விட்டர் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments