Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போடும் முறை தேவையா? ஐசிசி தீவிர ஆலோசனை!

Webdunia
வியாழன், 17 மே 2018 (14:14 IST)
கிரிக்கெட் போட்டியின் போது எந்த அணி பேட் செய்ய வேண்டும் எந்த அணி பவுல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய பல காலமாக டாஸ் போட்டி வருவது வழக்கமானது. 
 
ஆனால், தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது போல டாஸ் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க ஐசிசி தீவிர ஆலோசனையில் உள்ளது. 
 
இது குறித்து வெளியாகியுள்ள செய்திகல் பின்வருமாறு, டாஸ் போடுவதன் மூலம் ஒருதலைபட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று ஒருதலைபட்சமான முடிவுகள் ஏற்படுகின்றன என்று ஐசிசி கருதுகிறது.
 
அதாவது உள்நாட்டு அணி வாரியங்கள் சூழ்நிலைமையை தங்களுக்கு சாதகமாக உருவாக்கி கொள்வதால் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் வேறு வழியின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் டாஸ் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது. 
 
ஆகவே டாஸ் போடாமல், உள்நாட்டு அணி அல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிரணி கேப்டன் நேரடியாக பவுலிங்கா பேட்டிங்கா என்பதை முடிவு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய ஐசிசி ஆலோசித்து வருகிறதாம். 
 
2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் இதனை பரிசோதனை செய்யப்போவதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments