Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இடத்தில் களமிறங்கப் போவது யார்? ராகுல் டிராவிட் எடுத்த முடிவு!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:50 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐந்தாம் இடத்தில் விளையாடும் கே எல் ராகுலை கோலியின் இடத்தில் விளையாட வைக்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நான்காவது இடம் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான இடமாகும். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சாதனைப் படைத்த சச்சின், லாரா, பாண்டிங், கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் நான்காம் இடத்தில்தான் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments