Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க எல்லாரையும் ஏமாத்திட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க! – பஞ்சாப் கேப்டன் சாம் கரண்!

Prasanth Karthick
வெள்ளி, 10 மே 2024 (10:41 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து ப்ளே ஆப் தகுதியை இழந்த நிலையில் கேப்டன் சாம் கரண் மன்னிப்பு கேட்டுள்ளார்.



ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக ஐபிஎல் அணிகளிடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. நேற்று ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் இதில் எந்த அணி தோற்றாலும் ப்ளே ஆப் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் என்பதால் பெரும் பரபரப்புடன் இந்த போட்டி அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்த நிலையில் சேஸிங் இறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து பஞ்சாப் அணியும் ப்ளே ஆப் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

பஞ்சாப் அணியின் தோல்வி குறித்து பேசிய அதன் கேப்டன் சாம் கரண் “நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அது போட்டியின் இறுதிவரை செல்வதற்கு போதுமானதாக இல்லை. நாங்கள் தொடர்ந்து எங்களை வலுப்படுத்தி வருகிறோம். ரசிகர்களை ஏமாற்றியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments