Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்டுக்கோப்பாக வீசிய சி எஸ் கே பவுலர்கள்… ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த இலக்கு இதுதான்!

கட்டுக்கோப்பாக வீசிய சி எஸ் கே பவுலர்கள்… ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த இலக்கு இதுதான்!

vinoth

, ஞாயிறு, 12 மே 2024 (17:11 IST)
தற்போது சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிதான் சி எஸ் கே அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியாகும். அதனால் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் குவிந்துள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன் படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஆரம்பம் முதல் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். அந்த அணியின் ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கும், பட்லர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ரன்ரேட் அதலபாதாளத்துக்கு சென்றது.

கடைசி நேரத்தில் ரியான் பராக்(47) மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி முறையே ரன்கள் சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் சேர்த்தது. இந்த எளிய இலக்கை சி எஸ்கே அணி எட்டிப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணி சார்பாக சிமர்ஜித் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டி முடிந்த பின்னர் ரசிகர்களைக் காத்திருக்க சொன்ன சி எஸ் கே நிர்வாகம்… தோனியின் கடைசி போட்டியா?