Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

Advertiesment
ஐபிஎல்

vinoth

, திங்கள், 12 மே 2025 (08:29 IST)
காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடிக் கொடுத்த நிலையில் இரு நாட்டு ராணுவங்களும் எல்லைப் பகுதிகளில் மோதிக் கொண்டன. இதனால் கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவியது.

இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த சம்மதித்த நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இந்த வார இறுதிக்குள் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் மே 16 ஆம் தேதி முதல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மே 23 ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் நான்கு ப்ளே ஆஃப் போட்டிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய வீரர் விலகலால் ஆர் சி பி அணிக்குப் பெரும் பின்னடைவு…!