Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி ரிஷப் பண்ட்டின் கையில்தான் ஆட்டத்தின் அச்சாணி இருக்கும்.. முன்னாள் வீரர் பாராட்டு!

இனி ரிஷப் பண்ட்டின் கையில்தான் ஆட்டத்தின் அச்சாணி இருக்கும்.. முன்னாள் வீரர் பாராட்டு!

vinoth

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:17 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முன்னனி பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியபோது பேட்டிங்கில் சதமடித்தும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றியும்  அசத்தினார்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்தார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் கம்பேக் கொடுத்த பண்ட், தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா “ரிஷப் பண்ட் தன்னுடைய முதல் போட்டியிலேயே கம்பேக் கொடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு அணியினரும் ரிஷப் பண்ட்டைக் கண்டு அஞ்சுவார்கள். களமிறங்கிய சில நிமிடங்களிலேயே அவரது விக்கெட்டை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர் அனைவரையும் ஓடவிடுவார். ரிஷப் பண்ட் ப்ளேயிங் லெவனில் இருக்கும்போது ஆட்டத்தின் அச்சாணி அவர் கையில்தான் இருக்கும்’ எனப் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!