Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

Advertiesment
மும்பை இந்தியன்ஸ்

vinoth

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:07 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதுபோல ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை தன் தலைமையில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக அவருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு ஸ்டாண்ட்டுக்கு ரோஹித் ஷர்மாவின் பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ஆரம்பத்தில் சொதப்பிய ரோஹித் ஷர்மா தற்போது தன்னுடைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்துக் கலக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் டி 20 போட்டிகளில் 12000 ரன்கள் சேர்த்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை விராட் கோலிக்குப் பிறகு படைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடருமா சின்னசாமி சாபம்.. முடியுமா ஆர்சிபி சோகம்? - இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்!