Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து வீசியபோது சொதப்பிட்டோம்…? – தோல்வி குறித்து ரோஹித் சர்மா!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (08:52 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் நேற்று இந்திய அணி தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 நேற்று மொகாலியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும் அரைசதம் வீழ்த்தி அசத்தினார்கள்.

ALSO READ: “208 நல்ல ஸ்கோர்… ஆனா அவர்கள் சொதப்பிவிட்டார்கள்…” கேப்டன் ரோஹித் ஷர்மா வேதனை!

ஆனால் இரண்டாவதாக களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19வது ஓவரிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் வென்று வெற்றியை கைப்பற்றியது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து பேசிய அணி கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என நினைக்கிறேன். 200 என்பது நல்ல ஸ்கோர். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் பந்துவீச்சில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments