Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

Advertiesment
பஞ்சாப் கிங்ஸ்

vinoth

, செவ்வாய், 3 ஜூன் 2025 (09:53 IST)
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த 18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டுமே இதுவரைக் கோப்பையை வெல்லாத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு அவர் கோப்பையை வென்று கொடுத்தும் அவரை அந்த அணித் தக்கவைக்கவில்லை. இதனால் அவருக்கு இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு உள்ளது. மறுபக்கம் 17 ஆண்டுகளாக கோப்பையே வெல்லாத கோலியின் ஆர் சி பி. கோலி எப்படியாவது இந்த முறைக் கோப்பையைக் கையில் ஏந்தவேண்டும் என ரசிகர்கள் மட்டும் இல்லாம்ல முன்னாள் வீரர்கள் கூட ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இறுதிப் போட்டி குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் “ஸ்ரேயாஸ் டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அந்த அணி அவரை தக்கவைக்கவில்லை. அதே போல கே கே ஆர் அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்தார். இருந்தும் ட்ராப் செய்யப்பட்டார். இப்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். மறுபக்கம் பார்த்தால் விராட் கோலி. ஒவ்வொரு ஆண்டும் அவர் ஆயிரக்கணக்கில் ரன்களை சேர்க்கிறார்.  இந்த போட்டியில் யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!