Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்… தீர்ப்பு விரைவில்!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:24 IST)
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனே கடந்த ஆண்டு 17 வயதான மைனர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேபாள கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணையில் சந்தீப் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த நிலையில் விசாரணையில் அவர் குற்றவாளி என்பது அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை என்ன என்பது அடுத்த ஹியரிங்கில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தீர்ப்பு வந்த போது சந்தீப் நேபாள ப்ரோ லீக் தொடரில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்