Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில நாங்க அபாயகரமான அணிதான்… பங்களாதேஷ் கேப்டன் மிரட்டல்!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (12:10 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சூப்பர் 4 கடைசி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதன் பின்னர் விளையாடிய இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 259 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டி முடிந்ததும் பேசிய பங்களாதேஷ் அணி ஷகீப் அல் ஹசன் “நாங்கள் எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் இடம் கிடைக்கவேண்டும் என நினைத்து வாய்ப்பளித்தோம். எங்கள் அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

நாங்கள் ஒரு சிறந்த அணியை பெற்றிருக்கிறோம். எங்கள் அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்கள். நாங்கள் உலகக் கோப்பை தொடரில் ஒரு அபாயகரமான அணியாக இருப்போம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments