Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த கில் & ரோஹித் ஷர்மா!

vinoth
வெள்ளி, 8 மார்ச் 2024 (13:02 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதை பார்த்தோம்.

இந்திய பவுலர்களான குல்தீப் மற்றும் அஸ்வின் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை 218 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். குல்தீப் ஐந்து விக்கெட்களையும் அஸ்வின் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர்.57 ரன்கள் சேர்த்து ஜெய்ஸ்வால் அவுட் ஆன நிலையில் கில்லுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இருவரும் அபாரமாக ஆடி அடுத்தடுத்து சதமடித்தனர்.

பெரிய ஸ்கோரை நோக்கி செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தற்போது தேவ்தத் படிக்கல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 313 ரன்கள் சேர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments