Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தோம்… மும்பை பேட்ஸ்மேன்கள் தவறு செய்தார்கள்- குஜராத் கேப்டன் சுப்மன் கில்!

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (07:38 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் சேர்த்தது.

இந்த இலக்கை துரத்திச் சென்ற மும்பை இந்தியன்ஸ் கடைசி கட்டம் வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் குறைவான இலக்கை ட்ஃபண்ட் செய்ய குஜராத் அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

போட்டிக்குப் பின்னர் பேசிய குஜராத் கேப்டன் கில் “இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனாலும் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாகவே அடித்திருந்தோம். ஆனால் பவுலிங்கில் தொடர்ந்து மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தோம். அதனால் அவர்கள் சில தவறுகளை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுபோலவே நடந்தது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments