Publish Date: Tue, 09 May 2023 (08:20 IST)
Updated Date: Tue, 09 May 2023 (00:22 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். அவர் மேல் தோனி அளவுக்கதிமாக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் பற்றி பேசிய தோனி “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “மலிங்கா எங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்சமல்ல. அவருக்கு பதிலாகதான் இப்போது பதிரனா சென்னை அணிக்குக் கிடைத்துள்ளார். அவரின் யார்க்கர்கள் மிரட்டும் வண்ணம் உள்ளன. அவரின் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.