Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் விளையாட வீரர்கள் இன்று தேர்வு!

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:10 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான வீரர்களின் தேர்வு  சென்னையில் இன்று நடைபெறுகிறது
தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் 3வது சீசன் வரும் ஜூலை மாதம் 11ம் தேதி தொடங்கவுள்ளது.
 
இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
 
இந்த வீரர்கள் தேர்வுக்காக 772 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயரை பதவி செய்து உள்ளனர். இவர்களில் சிறப்பான வீரரை 8 அணிகளின் உரிமையாளர்களும் தங்களது அணிக்காக தேர்வு செய்ய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments