Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர சில இயற்கை அழகு குறிப்புகள் !!

புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர சில இயற்கை அழகு குறிப்புகள் !!
, சனி, 23 ஏப்ரல் 2022 (17:26 IST)
வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால்,  நிச்சயம் நல்ல அடர்த்தியான புருவத்தை பெறலாம்.


தேங்காய் எண்ணெய்யானது முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. எனவே இந்த எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது.

விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும்.

பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ அதிகம் உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டி விடும். தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.

கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் கண்கூடாக காணலாம்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊறவைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேங்காய் பால் அருந்துவதால் என்ன மருத்துவ நன்மைகள் தெரியுமா...?