Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடை காலத்தில் சருமத்தை பராமரிக்க சில எளிய டிப்ஸ் !!

கோடை காலத்தில் சருமத்தை பராமரிக்க சில எளிய டிப்ஸ் !!
, புதன், 16 மார்ச் 2022 (15:38 IST)
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும்.


கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

வெயிலில் வெளியில் அலைபவர்கள், அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும்.

வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

கோடைக்காலத்தில் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் உண்டாகும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உணவில் தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் , பழங்கள், தண்ணீர் இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை அற்புத பலன்களை தரக்கூடியதா சீரகத்தண்ணீர் !!