Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

Advertiesment
பிறந்த வீடு

Mahendran

, செவ்வாய், 11 நவம்பர் 2025 (18:12 IST)
திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து,  சில குறிப்பிட்ட பொருட்களை புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன.  
 
மகாலட்சுமி கடாட்சம்: உப்பு, புளி மற்றும் ஊறுகாய் போன்ற பொருட்களை எடுத்து சென்றால், பிறந்த வீட்டிலிருந்து மகாலட்சுமி வெளியேறி விடுவாள் என்பது ஐதீகம்.
 
உறவுகளில் விரிசல்: நல்லெண்ணெய் மற்றும் பாகற்காய்/அகத்திக்கீரை போன்ற கசப்பு தன்மையுள்ள காய்கறிகளை எடுத்து செல்வது இரு வீட்டாருக்கும் இடையே தேவையற்ற மனக்கசப்புகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
 
பிறந்த வீட்டின் குலதெய்வ படங்கள், சிலைகள் மற்றும் விளக்குகளை எடுத்து செல்லக் கூடாது. ஒரு வீட்டில் பயன்படுத்திய விளக்கை மாற்றுவது லட்சுமி கடாட்சத்தை குறைக்கும்.
 
சண்டை சச்சரவு: கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான இரும்பு பொருட்கள், துடைப்பம், முறம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்துச் செல்வது சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
கோலமாவை கூட இலவசமாக எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!