Publish Date: Tue, 03 May 2022 (18:31 IST)
Updated Date: Tue, 03 May 2022 (18:33 IST)
ஹிந்தி மொழி நல்ல மொழி என்றும் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் சுகாசினி கூறியதை அடுத்து தமிழ் மொழி பேசுபவர்கள் கெட்டவர்களா? என்ற கேள்வியை இயக்குனர் அமீர் எழுப்பியுள்ளார்
தமிழ் கன்னட மலையாள மொழி பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? என சுஹாசினியிடம் கேட்க வேண்டும் என்றும் இந்தி மொழி பேசத் தெரியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறு என்கிறார்கள் சிலர், முதலில் என் நாட்டிலிருந்து நீ வெளியேறு என்று கூறினார்
இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று கூறிய சுகாசினி தமிழ் மொழி பேசுபவர்கள் நல்லவர்கள்தான் என்று கூறியதை கவனிக்காமல் அமீர் இவ்வாறு விமர்சனம் செய்வதாக நெட்டிசன்கள் அவரை அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்