Publish Date: Sun, 08 May 2022 (09:45 IST)
Updated Date: Sun, 08 May 2022 (09:21 IST)
தமிழகம் உள்பட இந்தியாவில் கொரனோ கொரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஏற்கனவே கொரோனா மூன்று அலை பரவி இலட்சக்கணக்கான மக்களை பாதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 4வது அலை ஜூன் மாதம் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றும், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல் முறை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு நான்காவது அலையில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது