Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வின்னிங் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர்: வெற்றிக்கு பின் கூறியது என்ன?

Advertiesment
ஐபிஎல் 2018
, சனி, 28 ஏப்ரல் 2018 (13:19 IST)
ஐபிஎல் தொடரில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 
 
கவுதம் கம்பீர் கேப்டன்சியைத் துறந்ததையடுத்து, கேப்டனான ஷ்ரேயஸ் அய்யர், டெல்லி அணிக்காக அதிரடி இன்னிங்சை ஆடி 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். 
 
முதல் போட்டியில் கேப்டனாக களமிறங்கி, ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர், வெற்றிக்கு பின் கூறியது பின்வருமாறு...
 
அதுவும் கேப்டனாக முதல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது பேருணர்ச்சியை அளிக்கிறது. உண்மையில் டாஸ் தோற்றது நல்லதாக போய்விட்டது. 
ஐபிஎல் 2018
ஏனெனில், டாஸ் வென்றிருந்தால் நாங்கள் முதலில் பவுலிங் செய்வதாகவே இருந்தோம். ஆனால் முதலில் பேட் செய்த போது எங்களை நாங்கள் வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் கிடைத்தது.
 
இரண்டு இன்னிங்ஸ்களுமே திருப்திகரமானது. இந்த சீசன் தொடங்கியது முதல் பிரித்வி ஷா அபாரமாக ஆடி வருகிறார். இவருடன் இணைந்து கொலின் மன்ரோ எங்களுக்கு 50 ரன்கள் கூட்டணி அமைத்துக் கொடுத்தனர். 
 
பவுலிங் வரிசையில் பந்தை ஒருவர் கையில் தயங்காமல் கொடுக்க முடியும் என்றல் அது பிளங்கெட்தான். அதுவும் என்னிடம் வந்து 16 மற்றும் 17வது ஓவரை அவர்தான் வீச வேண்டும் என்று கூறியது நெகிழ்ச்சியானது என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணியின் வெற்றி தொடருமா? மும்பையுடன் இன்று மோதல்