Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான கேலக்சி நோட்-7 அண்மையில் வெளியிடப்பட்டது. தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
வெளியான சிறிது நாட்களிலே மொபைல் போன் வெடிக்க தொடங்கியதால், சாம்சங் நிறுவனம் மொபைல் போனை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தது.
அதைத்தொடர்ந்து அந்த ரக மொபைல் போன் விற்பனையையும் அது நிறுத்தியுள்ளது. மாற்றி கொடுக்கப்பட்ட மொபைல் போன்களிலும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவற்றை மாற்றி கொடுக்கும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.
மொபைலுக்கு சார்க் போடும் வேளையில், பேட்டரிகள் தீப்பற்றிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.