Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாய் கட்டிங், குர்தா... நீ ஆணா? பெண்ணா? நாஞ்சில் சம்பத் நக்கல்

Advertiesment
நாஞ்சில் சம்பத்
, வியாழன், 28 மார்ச் 2019 (15:22 IST)
நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் பேச்சாளரும் முன்னால் அரசியல் தலைவருமான நாஞ்சில் சம்பத் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை நீ ஆணா பெண்ணா? என கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை கடுமையாக வினர்சித்துள்ளார். 
 
முதலில் நீரவ் மோடி என கிரண் பேடியின் பெயரை தவறாக கூறி பின்னர் அருகில் இருந்தவர் திருத்தியதும் கிரண் பேடி என அவரின் சரியான பெயரை கூறி நாஞ்சில் சம்பத் டெல்லியிலே காயடிக்கப்பட்டு எங்கே கொண்டு போகலாம் என்றால் பாண்டிச்சேரியிலே வந்து விடுவதா? பாய் கட்டிங், குர்தா நீ ஆணா? பெண்ணா? என்றே தெரியவில்லை. 
நாஞ்சில் சம்பத்
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இவ்வளவு இடையூறுகளையா கொடுப்பது. தமிழகத்தில் புரோகித், புதுவையில் கிரண்பேடி. இது போன்று பாஜக ஆளும் 21 மாநிலங்களிலும் இதே நிலைதான். இதற்குப் பெயா்தான் ஜனநாயகமா என்று என பிரச்சாரத்தின் போது கடுமையாக விமர்சித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துகுடி தொகுதியின் முக்கிய வேட்பாளர் வேட்புமனு வாபஸ்!