Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ குளிச்சா செத்துபோயிருவ; போய் டீ குடி: டக்லைஃப் துரைமுருகன்

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (10:58 IST)
தேர்தல் வந்தாலே ரெய்ட் நடக்கும் என்பதும் கட்டாயம் ஆகிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகவிலும் இது போன்ற அதிரடி ரெய்டுகள் நடைபெற்று வருகிறது. 
 
குறிப்பாக தமிழகத்தில், கடந்த சில நாட்களாக திமுக பொருளாலர்  துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
 
எனவே இது குறித்து விளக்கம் அளிக்க துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தினால் கட்சியில் இருக்கும் மற்ற நபர்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் இப்போது மேலும் வலிமையாக இருக்கிறோம். 
அதிமுக - பாஜக கூட்டணிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால் யாருக்கு பலன் என்ற "அரசியல் அரிச்சுவடி" கூட தெரியாதவர்களாக இவர்கல் இருக்கிறார்கள் என பேசிக்கொண்டிருந்தார். 
 
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டன் ஒருவன் தலைவா நான் தீ குளிக்கட்டுமா? சொல்லுங்க தலைவா, இப்பவே நான் தீ குளிக்க தயார் என கத்தினார். இதற்கு சற்றும் தளராத துரைமுருகன், தீக்குளிச்சா நீ செத்துப்போயிடுவ. தீ எல்லாம் குளிக்காத, போய் டீ குடிச்சிட்டு வேலையை பாரு என்று கேஸ்வலாக பதில் அளித்தார். 
 
இது போன்று நாசுக்காக பேசுவது துரைமுருகனுக்கு புதிதல்ல, இதில் அவர் எப்போதும் வல்லவர்தான். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments