Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டுக்கறி வெட்டி வாக்கு சேகரிப்பு..! கவனத்தை ஈர்த்த தேமுதிக வேட்பாளர்..!!

Senthil Velan
திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:09 IST)
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசன் கசாப்புக் கடையில் ஆட்டுக்கறி வெட்டியும் பெரியோர்கள் காலில் விழுந்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.  மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தோசை சுடுவது, பூரி சுடுவது, டீக்கடையில் டீ போடுவது போன்று நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் 
 
இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவநேசன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளர் சிவநேசனுக்கு ஆதரவாக, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு உள்ளிட்ட கிராமங்களில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
முன்னதாக, அப்பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் முன்னாள் அமைச்சர் காமராஜ், வேட்பாளர் சிவநேசன் உள்ளிட்டோர் சாமி வழிபாடு செய்து பிரச்சாரத்தைத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பெரியவர்கள் காலில் விழுந்தும் வேட்பாளர் சிவநேசன் வாக்கு சேகரித்தார். 

ALSO READ: மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாதது ஏன்.? பிரதமர் மோடிக்கு உதயநிதி சரமாரி கேள்வி..!
 
பின்னர், அங்குள்ள இஸ்லாமியர் வீட்டில் ஓட்டு கேட்கச் சென்றபோது, வேட்பாளர் சிவநேசன் அங்கிருந்த கறிக்கடையில் ஆட்டுக்கறியை வெட்டி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments