Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுரியில் அன்புமணி பின்னடைவு – அதிர்ச்சியில் பாமக !

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:55 IST)
பாமகவின் கோட்டையான தருமபுரியில் பாமகவின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மகக்ளவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வரும் வேளையில் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரியில் தொடக்கத்தில் முன்னிலை வகித்த் பாமகவின் அன்புமணி ராமதாஸ் இப்போது திமுக வேட்பாளர் எஸ் செந்தில்குமாரை விட 13000 வாக்குகள் கம்மியாக வாங்கி பின்னடைந்துள்ளார்.

காலை முதல் இந்த தொகுதியில் நிலைமை மாறி மாறி வந்துகொண்டிருப்பதால் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது கடைசி வரை இரண்டு தரப்புக்கும் இழுபறியாக இருக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments