Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தொகுதியில ஒரு லட்சம் ஓட்டை காணவில்லை: கமீலா நாசர் பகீர் புகார்

Webdunia
வியாழன், 23 மே 2019 (17:23 IST)
தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர். இவர் கட்சியின் சென்னை மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார்.
 
கமீலா நாசரின் வெற்றிக்காக இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். இந்த தொகுதியில் கமீலா நாசர் வெற்றி பெறுவார் அல்லது இரண்டாவது இடத்திலாவது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு மூன்றாவது இடம் மட்டுமே கிடைத்துள்ளது
 
இந்த நிலையில் தனது பின்னடைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமீலா நாசர், 'எனது தொகுதியான மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் பகுதியில் சுமார் 1.13 லட்சம் வாக்காளர்களின் ஓட்டுகள் திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டுக்கள் இருந்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். இருப்பினும் 13 மாத குழந்தையான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மூன்றாவது இடம் கொடுத்த மக்களுக்கு எனது நன்றி என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments