Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று உயர்வு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு அச்சம்..!

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, செவ்வாய், 14 அக்டோபர் 2025 (09:50 IST)
கடந்த வாரம் பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சந்தை சரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கினாலும், மிகவும் குறைவான ஏற்றமே இருப்பதால் முதலீட்டாளர்கள் இன்றும் சந்தை சரியுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 2 புள்ளிகள் உயர்ந்து 82,303 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,237 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மிகக் குறைவான ஏற்றம் மட்டுமே இருப்பதால், மதியத்திற்கு மேல் திடீரென சரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டிகோ, இன்போசிஸ், ஐ.டி.சி., ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், மாருதி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகிய பங்குகளின் விலைகள் சரிந்து விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்வு? 94 ஆயிரத்தை தாண்டிய தங்கம்!