Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. 72000ஐ தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share

Siva

, வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (12:43 IST)
மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்து 72387 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 209 புள்ளிகள் உயர்ந்து  21923 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாட்டை துரைமுருகன் மனைவியிடம் 3 மணி நேரம் விசாரணை.. என்.ஐ.ஏ அதிரடி