Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சிரிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை: ரேணுகா சவுத்ரி எம்பி

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (23:58 IST)
சமீபத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்பி ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தது குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய ரேணுகா சவுத்ரி எம்பி, நான் சிரிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்றும், நான் இயல்பாகவே சத்தமாக சிரிக்கும் வழக்கம் உடையவர் என்றும் கூறினார்.

மேலும் பாராளுமன்றத்தில் சிரித்ததன் மூலம் அதிகார சக்திகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், என்னை விமர்சனம் செய்ததன் மூலம், பிரதமர் மோடி எவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லவேளை சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என்று கேலியாக குறிப்பிட்ட ரேணுகா, இனி தான் எச்சரிக்கையாக இருக்கவுள்ளதாகவும், பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி.,க்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் ரேணுகா சௌத்ரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments