Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு: நீதிபதி அறிவிப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு: நீதிபதி அறிவிப்பு!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (10:43 IST)
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.


 
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக 200 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் ஆ.ராசா, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி.
 
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என வழக்கறிஞர்கள் கேட்டதற்கு பதில் அளித்துள்ள நீதிபதி ஓ.பி.ஷைனி வரும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பின் அறிவிக்கப்படலாம் என கூறியுள்ளார். மேலும் அப்படி 25-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை என்றால் அடுத்த 10 நாட்களுக்குள் தீர்ப்பு கண்டிப்பாக வரும் என தெரிவித்துள்ளார்.
 
நாட்டையே அதிர வைத்த இந்த 2ஜி விவகாரம் காங்கிரஸ், திமுக கூட்டணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் திமுக தரப்பு கலக்கத்தில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments