Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 30 மணி நேரம் காத்திருப்பு

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (07:40 IST)
திருப்பதியில் கூட்டம் அலைமோதி வருவதாகவும் இதனால் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கணக்கிடப்பட்டது. தற்போது கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்து கொண்டிருக்கின்றனர். 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து அதற்காக 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங் களுக்கு வழங்கப்படும் விஐபி டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வார நாட்களில் நடைபெறும் விசேஷ பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments