Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

32 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரியை சீல் வைத்த அதிகாரிகள்!

32 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரியை சீல் வைத்த அதிகாரிகள்!
, புதன், 1 செப்டம்பர் 2021 (18:57 IST)
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்கள் சமீபத்தில் கேரளா சென்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் இருந்து திரும்பியதும் பரிசோதனை செய்ததில் 32 பேருக்கும் கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாகவும் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
32 மாணவர்களை கேரளாவுக்கு அனுப்பிய கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் வரலாறு காணாத மழை: ஆரஞ்ச் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!