தேசிய விருது விழாவை புறக்கணித்த 69 பேர் - ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 மே 2018 (14:30 IST)
தேசிய விருதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடமிருந்து பெற எதிர்ப்பு தெரிவித்து 69 கலைஞர்கள் விழாவை புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் 65வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் டூ லெட், பாகுபலி, மலையாள நடிகை பார்வதி, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. 
 
பொதுவாக தேசிய விருதை ஜனாதிபதிதான் கொடுப்பார். ஆனால், இந்த முறை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே கொடுப்பார். மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இராணி அளிப்பார் என அறிவிக்கப்பட்டது.
 
இதனால், கோபமடைந்த இயக்குனர் செழியன், நடிகை பார்வதி, பாகுபலி பட தயாரிப்பாளர் பிரசாத் உள்ளிட்ட 69 பேர் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் விருதை கொடுக்க முடியாது எனில் அது தங்களுக்கு வேண்டாம் எனக் கூறிய அவர்கள், விழாவை புறக்கணிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பிவிட்டனர்.
 
இந்த விவகாரம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் ராணுவத்தை அழித்துவிட்டோம்!.. அதான் பயந்துட்டாங்க - டொனால்ட் டிரம்ப்

விஜய் சார் வந்தபின் மாசம் ரூ.30 ஆயிரம் மிச்சம்!.. ரவி மரியா சொன்ன தகவல்..

ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது 69000 வழக்குகள்... 53000 கோடிக்கும் மேல் இழப்பீடு...

கேட்ட இடத்தில் டிரான்ஸ்பர்.. ஒரு பைசா லஞ்சம் இல்லை.. மகிழ்ச்சியில் காவல்துறையினர்.. இதுதாண்டா மாற்றம்...

கிடப்பில் இருக்கும் சின்ன திரைப்படங்கள் எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்க.. அரசு சார்பில் மானியம்.. முதல்வர் விஜய் உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments