Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய 100 பேர்கொண்ட கும்பல்

telungana
, சனி, 10 டிசம்பர் 2022 (15:21 IST)
தெலுங்கானாவில் ரெங்கா ரெட்டி என்ற மாவட்டத்தில் துர்கயாம்ஜல்  நகராட்சி பகுதியில் அடிபட்லா என்ற இடத்தில் ஒரு விட்டில்புகுந்து இளம் மருத்துவரை ஒரு கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லா என்ற பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வைஷாலி(24). இவருக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

இவர், வீட்டிற்குள்  நேற்று 100 பேர் கொண்ட கும்பல் புகுந்து அவர்கள் வீட்டில் இருந்து பொருட்களை சூறையாடி, படுக்கையில் இருந்த பெண் மருத்துவரை கடத்திச் சென்றனர்.

இதில், அவரது பெற்றோரையும் கடுமையான தாக்கினர். இதில் அவரது தந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், பெண் மருத்துவர் தற்போது நலமுடன் இருப்பதாக பெற்றோருக்கு போனில் தெரிவித்துள்ளளார்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?