Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடல் ட்ரெஸ் போட மறுத்த மனைவிக்கு முத்தலாக்! – டெல்லியில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (17:54 IST)
நவீன பாணி ஆடைகளை அணிய மறுத்த மனைவியை கணவன் முத்தலாக் செய்துள்ள சம்பவம் டெல்லியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த பாத்திமா என்பவருக்கும் இம்ரான் முஸ்தபாவிற்கும் 2015ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தம்பதியர் டெல்லியில் செட்டிலாகி விட்டார்கள். இந்நிலையில் முஸ்தபா தனது மனைவி பாத்திமாவை குட்டை பாவாடை போன்ற நவீன மாடல் உடைகளை அணியும்படி வற்புறுத்தியிருக்கிறார். மேலும் மது அருந்தவும், க்ளப்களில் டான்ஸ் ஆடவும் வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால் பாத்திமா இவற்றையெல்லாம் செய்ய மறுத்துள்ளார். அதனால் அடிக்கடி முஸ்தபா அடிக்கடி அவரை அடித்து கொடுமை செய்துள்ளார். அத்துடன் கொடுமை முடியவில்லை. இரண்டு முறை கர்ப்பமான பாத்திமாவை வற்புறுத்தி கருகலைப்பும் செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாத்திமாவுக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றிருக்கிறார் முஸ்தபா. விவகாரத்து நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பீகார் போலீஸில் புகார் அளித்துள்ளார் பாத்திமா. அதன்படி விசாரணைக்கு ஆஜராகும்படி முஸ்தபாவுக்கு பீகார் போலீஸிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொந்த மனைவியையே கணவர் ஒருவர் கவர்ச்சியான ஆடைகளை அணிய சொல்லியும், மது அருந்த சொல்லியும் கொடுமைப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments