Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரொனா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை -மத்திய அரசு

கொரொனா  தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை -மத்திய  அரசு
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:32 IST)
இந்தியாவில் கொரொனா  தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை என மத்திய  அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு உருமாறிய கொரொனாவான ஒமிக்ரான் வைரஸ்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ள பி.ஏ2 வைரஸ் ஒமிக்ரானை காட்டிலும் அதிவேகமாகப் பரவி வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகிறது.

தடுப்பூசி  செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்  எ ன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி  என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மேலும், 4 மா நிலங்களில் சுமார் 96.99%என்ற நிலையை  எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,  ஆதார்  அட்டையில்லாமல்  இதுவரை 87 லட்சம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலர்ந்தது தாமரை; போட்டியின்றி தேர்வான முதல் பாஜக கவுன்சிலர்!