Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது''- அரவிந்த் கெஜ்ரிவால்

gujrath
, வியாழன், 8 டிசம்பர் 2022 (20:00 IST)
குஜராத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய கட்சியாக  ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த  டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் நடந்த தேர்ந்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகின்றது.

இதில், இதில், பாஜக 135 தொகுதிகளீல் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளதுடன் மேலும், 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும்,  மேலும், 5 தொகுதிகளிலும் முன்னிலையிலுள்ளது.
ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 1 தொகுதியில் முன்னிலையுடன் 13% வாக்குகள் பெற்றுள்ளது.


எனவே, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது குஜராத்திலும் கால் பதித்து, கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் தேசிய கட்சியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை விடுமுறை!