Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் தங்கு தடையின்றி கிடைக்கும் ஆசிட்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (12:47 IST)
ஆன்லைனில் தங்கு தடையின்றி  ஆசிட் கிடைப்பதால் குற்றங்கள் பெருகி வருகிறது என்றும் குறிப்பாக பெண்கள் மீது ஆசிட் ஊற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள 17 வயது பள்ளி மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசிய குற்றத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஆன்லைனில் ஆசிட் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆன்லைனில் தங்கு தடை இன்றி ஆசிட் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது
 
ஆசிட் வாங்க வருபவர் தகுந்த காரணத்தை விளக்கி அடையாள ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே ஆசிட் வாங்க முடியும் என்ற முறை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு மாறாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாகவும் காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளன. 
 
இந்த நிலையில் ஆன்லைனில் ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments