Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார்; இறங்கி வந்த மோடி

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (12:04 IST)
சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி வரியில் திருத்தம் செய்ய தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மோடி மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவும் குற்றம்சாட்டி வருகிறார்.
 
இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கம்பெனி செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:-
 
நாட்டின் வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தற்போதை விட உள்நாடு உற்பத்தி விகிதம் குறைவாக இருந்துள்ளது. இந்தியாவை வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றியதே நாங்கள்தான். 
 
சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாங்கள் எடுக்கும் முடிவுகளால் இந்தியா புதிய வளர்ச்சி பாதையை நோக்கி நடைபோடும். ஜி.எஸ்.டி வரி விதிப்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திகும் இடையூறுகளை கண்டறிந்து அகற்றுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிவுறுத்து உள்ளேன். 
 
சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி. வரியில் திருத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments