Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன நடக்குமென தெரியவில்லை : நடிகை அனன்யா (வீடியோ)

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (17:11 IST)
கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கி பின் மீண்ட நடிகை அனன்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 
கேரளாவில் கடந்து 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் நீரில் மூழ்கி இதுவரை 324 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடியிறுப்புகளை சுற்றி நீர் சூழ்ந்திருப்பதால் வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களை கொட்டும் மழையிலும் ராணுவ  வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தமிழில் எங்கேயும் எப்போதும், போராளி, நாடோடிகள், சீடன் உள்ளிட்ட படங்களில் நடித்த அனன்யா, கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில்  வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில் “என் வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. என் குடும்பத்தினர் தற்போது நடிகை ஆஷா ஷரத்தின் வீட்டில் இருக்கிறோம். இன்று இரவு பாதுகாப்பாக தூங்க முடியும் என நம்புகிறேன். என் உறவினர்கள் வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இப்போதுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம். இந்த மழையால் என்ன நடக்குமெனெ தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. எங்களை காப்பாற்றியவர்களுக்கு நன்றி. வெள்ளத்தால் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என விரும்புகிறேன்” என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments